SRI SARADA AYURVEDIC HOSPITAL


Healthy Recipes

புளி இஞ்சி

தேவையான பொருட்கள்

  • இஞ்சி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் - 8
  • புளி - ஒர் எலுமிச்சை அளவு
  • வெல்லம் - ஒர் எலுமிச்சை அளவு
  • மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
  • உப்பு - சுவைக்கு ஏற்ப
  • நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் - ஒரு சிட்டிகை
  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

புளியை தண்ணீரில் இருபது நிமிடம் ஊறவைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். அடி கனமான கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்க்கவும். இதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இஞ்சி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். இதில் புளிக் கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி அதனை புளிக் கரைசலில் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். திக்காகி சாஸ் பதம் வந்ததும், இறக்கவும். ஆறவைத்து டப்பாவில் போட்டு வைக்கலாம். தயிர் சாதத்திற்கு பெஸ்ட் காம்பினேஷன்.


மாம்பழம் புளிசேரி

தேவையான பொருட்கள்

  • மாம்பழம் - 3
  • மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - 4 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • தயிர் - 300 மி.லி
  • தேங்காய் - அரை மூடி
  • சீரகம் - ½ மேசைக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் - 3

செய்முறை

மாம்பழத்தை தோல் சீவி பெரிய துண்டுகளாக வெட்டி, அதில் இரண்டு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு வேகவிடவும். தேங்காய், சீரகம், மஞ்சள் தூள், அனைத்தையும் ஒன்றாக மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை மாம்பழக் கூழுடன் சேர்த்து ஒரு கொதி விடவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை மற்றும் மூன்று காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து மாம்பழ குழம்பில் சேர்க்கவும்.


வெண்டைக்காய் கிச்சடி

தேவையான பொருட்கள்

  • வெண்டைக்காய் - 150 கிராம்,
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை, கடுகு, உப்பு - தேவையான அளவு
  • தேங்காய் - அரை மூடி
  • காய்ந்த மிள்காய் - 3
  • தயிர் - அரை கப்
  • தேங்காய் எண்ணெய் - கால் கப்

செய்முறை

வெண்டைக்காயை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் சேர்த்து, வெண்டைக்காயை நன்கு வறுத்து தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் நன்கு வதக்கி தனியே வைக்கவும். துருவிய தேங்காயுடன் கால் ஸ்பூன் கடுகை சேர்த்து மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளுவும். இதில் அரை கப் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். அரைத்துள்ள விழுதை வெண்டையில் சேர்த்து சிறிதளவு உப்பு மற்றும் தாளித்த பொருட்களைவும் சேர்த்து மூடி போட்டு ஒரு கொதி விட்டு இறக்கவும்.


பைனாப்பிள் பழப் பச்சடி

தேவையான பொருட்கள்

  • பைனாப்பிள் - 1
  • நேந்திரம்பழம் - 3
  • மஞ்சள் தூள் - ½ மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
  • தண்ணீர் - 1 டம்ளர்
  • தேங்காய் - அரை மூடி துருவியது
  • கடுகு - ¼ மேசைக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் - 3
  • கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் - தேவைக்கு ஏற்ப
  • தயிர் - 3 மேசைக்கரண்டி

செய்முறை

பைனாப்பிள் மற்றும் நேந்திரப்பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். அதன் பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் சேர்க்கவும். மிக்சியில் தேங்காய்த் துருவல் மற்றும் கடுகு சேர்த்து நன்கு அரைத்து அதனை வேக வைத்துள்ள பழத்துடன் சேர்த்து ஒரு கொதி விடவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை பச்சடியில் சேர்க்கவும். கடைசியில் தயிர் சேர்த்து நன்கு கலந்து செய்து பரிமாறவும்.


முட்டைக் கோஸ் தோரன்

தேவையான பொருட்கள்

  • முட்டைக்கோஸ் - 500 கிராம்
  • தேங்காய் - அரை கப்
  • பச்சை மிளகாய் - 4
  • கறிவேப்பிலை - தேவைக்கு
  • கடுகு - தாளிக்க
  • உளுந்து - 1 மேசைக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கு

செய்முறை

முட்டைக்கோஸை பொடியாக நறுக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், உளுந்து சேர்த்து தாளிக்கவும். இதில் முட்டைக்கோஸ், மஞ்சள் தூள், சிறிது தண்ணீர் தெளித்து உப்பு சேர்த்து மூடி போட்டு வேகவிடவும். முட்டைக்கோஸ் வெந்ததும், துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.


மாங்காய் அச்சர்

தேவையான பொருட்கள்

  • மாங்காய் - 2
  • மிளகாய்த் தூள் - 4 மேசைக்கரண்டி
  • உப்பு - 3 மேசைக்கரண்டி
  • கடுகுத் தூள் - 1 மேசைக்கரண்டி
  • வெந்தயப் பொடி - 25 கிராம்
  • பெருங்காயப் பவுடர் - 1 மேசைக்கரண்டி
  • தண்ணீர் - 2 கப்
  • தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

மாங்காயை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய்த்துண்டுகள் மற்றும் அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் இருக்கும் போது, அதனை மாங்காய்க் கலவையுடன் சேர்க்கவும்.


நாரங்கா அச்சர்

தேவையான பொருட்கள்

  • எலுமிச்சை - 8
  • மிளகாய்த் தூள் - 50 கிராம்
  • பச்சை மிளகாய் - 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
  • இஞ்சி - 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)
  • உப்பு - 25 கிராம்
  • கடுகுத் தூள் - 25 கிராம்
  • வெந்தயப் பொடி - 25 கிராம்
  • பெருங்காயப் பவுடர் - 1 மேசைக்கரண்டி
  • தண்ணீர் - 2 கப்

செய்முறை

எலுமிச்சையை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய எலுமிச்சை துண்டுகள் மற்றும் அனைத்துப் பொருட்களைவும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து மிதமான சூட்டில் இருக்கும் போது அதனை எலுமிச்சைக் கலவையுடன் சேர்க்கவும்.


ஓலன்

தேவையான பொருட்கள்

  • காராமணி - 250 கிராம்
  • வெள்ளைப் பூசணிக்காய் - 500 கிராம்
  • பச்சைமிளகாய் - 8
  • உப்பு - 2 மேசைக்கரண்டி
  • பெருங்காயப் பொடி - ¼ மேசைக்கரண்டி
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • தேங்காய்ப்பால் - 1 டம்ளர்
  • தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

காராமணியை இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் வெள்ளை பூசணிக்காய், பச்சை மிளகாய் சேர்த்து வேகவைக்கவும். இதில் உப்பு மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி விடவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலை, பெருங்காய்ப் பவுடர் தாளித்து இதனுடன் சேர்க்கவும்.


அவியல்

தேவையான பொருட்கள்

  • வெள்ளைப் பூசணிக்காய் - 250 கிராம்
  • புடலங்காய் - 250 கிராம்
  • சேனைக்கிழங்கு - 250 கிராம்
  • முருங்கைக்காய் - 2
  • காராமணி - 100 கிராம்
  • பீன்ஸ் - 100 கிராம்
  • கேரட் - 1
  • வாழைக்காய் - 1
  • பச்சை மிளகாய் - 8
  • மாங்காய் - 1
  • மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - ½ மேசைக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
  • தேங்காய்த் துருவல் - ½ மூடி
  • கறிவேப்பிலை, உப்பு - தேவைக்கு ஏற்ப
  • சீரகம் - 1 மேசைக்கரண்டி

செய்முறை

எல்லா காய்கறிகளைவும் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இதனை குக்கரில் சேர்த்து, ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து பச்சைமிளகாய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும். தேங்காய், சீரகத்தை மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இதனை வேகவைத்துள்ள காய்கறியில் சேர்த்து நன்கு கலந்து ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். மற்றொரு கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து அதனை காய்கறியில் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.


கத்தரிக்காய் கொத்ஸு

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் - 2 பெரியது
  • தக்காளிப் பழம் - 2 பொடியாக நறுக்கயது
  • புளி கரைச்சல் - 1 மேசைக்கரண்டி
  • உப்பு - தேவைக்கேற்ப
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி
  • கடுகு, காய்ந்த மிளகாய் பெருங்காயம், கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

கத்தரிக்காயில் சிறிது எண்ணெய் தடவி சுட்டுக் கொள்ளவும். தோலை நீக்கி நன்றாக மசித்துக் கொள்ளவும். எல்லா பொருட்களைவும் ஒன்றாகக் கலக்கவும். கடுகு, மிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். கத்தரிக்காறை மிருதுவாக ஆகும் வரை சுடவும்.


கீரை மண்டி

தேவையான பொருட்கள்

  • முளைக்கீரை (அ) தண்டுக்கீரை - 2 கட்டு
  • சாம்பார் வெங்காயம் - 10
  • காய்ந்த மிளகாய் - 2
  • அரிசி களைந்த நீர் - தேவையான அளவு
  • தேங்காய்ப்பால் கெட்டியாக - ½ டம்பளர்
  • கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

கீரையைக் கழுவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகாயைக் கிள்ளி வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, கடுகு, உளுந்தம் பருப்பபைப் போட்டு காய்ந்த மிளகாயைப் போடவும். கடுகு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.வெங்காயம் வதங்கியவுடன் கீரையைப் போட்டு வதக்கவும். கீரை வதங்கியவுடன் அரிசி களைந்த நீரை ஊற்றவும். மண்டி கெட்டியாக வேண்டுமானால் 1 மேஜைக்கரண்டி பாசிப்பருப்பைப் போடலாம். கீரை வெந்து, நீர் சுண்டியவுடன் உப்புப் போட்டு தேங்காய்ப்பாலை ஊற்றி அடுப்பில் இருந்து இறக்கவும். இதே போல் பொன்னாங்கண்ணி, அகத்திக்கீரையிலும் செய்யலாம்.


காய்கறி மண்டி

தேவையான பொருட்கள்

  • கத்தரிக்காய் - 100 கிராம்
  • முருங்கைக்காய் - 1
  • வாழைக்காய் - 1
  • உருளைக்கிழங்கு - 1
  • கேரட் - 1
  • மாங்காய் - 1
  • அவரை, காராமணி, பீன்ஸ் - 50 கிராம்
  • பச்சை மிளகாய் - 20
  • சாம்பார் வெங்காயம் - 10
  • பூண்டு - 10 பல்
  • தக்காளி - 2
  • கடுகு, உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
  • பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
  • எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
  • அரிசி களைந்த நீர் - 2 டம்ளர்
  • புளி - எலுமிச்சம்பழ அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

காய்கறிகளைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். பூண்டை உரித்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை வகுந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் காய வைத்து கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தைத் தாளிக்கவும். கருவேப்பிலை போட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும். காய்கள் வதங்கியவுடன் அரிசி களைந்த நீரை ஊற்றி காய்களை வேகவிடவும். 2 மேஜைக்கரண்டி பாசிப்பருப்புப் போட்டால், மண்டி கெட்டியாக இருக்கும். காய்கள் வெந்தவுடன் உப்பு, புளியைக் கரைத்து ஊற்றவும். விருப்பமானால் தேங்காய் சிறுதுண்டுகளாக கீறிப் போடலாம். மண்டி தண்ணீர் இல்லாமல் கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.


வற்றல் மண்டி

தேவையான பொருட்கள்

  • அவரை வற்றல் - கைப்பிடி அளவு
  • கத்தரி வற்றல் - கைப்பிடி அளவு
  • மாவற்றல் - கைப்பிடி அளவு
  • மோர் மிளகாய் வற்றல் - கைப்பிடி அளவு
  • தட்டப்பயறு - ½ ஆழாக்கு
  • வெங்காயம் - 2
  • தக்காளி - 2
  • அரிசி களைந்த நீர் - 2 டம்ளர்
  • எண்ணெய் - 3 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

வற்றல்களை எல்லாம் கழுவி கால் மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். தட்டப்பயறை வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும்.வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பைத் தாளித்து, வெங்காயம், தக்காளியைப் போடவும். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்துள்ள வற்றல்களை தண்ணீர் இல்லாமல் போட்டு அரிசி களைந்த நீரை ஊற்றவும். வற்றல்களை வெந்தவுடன் வேக வைத்துள்ள தட்டப்பயறை ஊற்றவும். தேவையானால் புளி, உப்புச் சேர்க்கவும். தண்ணீர் கொஞ்சம் சுண்டியதும் இறக்கவும்.


தேங்காய் சாதம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • தேங்காய் துருவல் - 1 கப்
  • தேங்காய் எண்ணெய் - தேவைக்கு
  • உப்பு - தேவைக்கு
  • நெய் - 1 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - தேவைக்கு
  • கொத்தமல்லி இலை - தேவைக்கு
  • முந்திரிபருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1
  • பச்சை மிளகாய் - 1
  • கடலைபருப்பு - 1 டீஸ்பூன்
  • கடுகு - ½ டீஸ்பூன்
  • உடைத்த உளுந்து - 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய்கள் தாளித்து முந்திரிபருப்பு, கடலைபருப்பு, கறிவேப்பிலை, வதக்கி தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி நிறுத்தவும். அரிசியை உதிரி உதிரியாக வடித்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் கலவையை அதில் கொட்டி கிளறி மல்லித்தழை தூவி நெய் உருக்கி ஊற்றி பரிமாறவும்.


Our Vision

Our vision is to rejuvenate and revitalize lives through the profound wisdom of Ayurveda. We aspire to be a beacon of health and happiness, empowering individuals to embrace their well-being and lead a balanced life.

Testimonials

Discover the success stories of our satisfied patients. Read testimonials from individuals who have experienced remarkable improvements in their health and quality of life through our Ayurvedic treatments.

Contact Us

Are you ready to embark on a transformative journey towards health and well-being? Get in touch with our team today to schedule a consultation or to learn more about our services.

Location: Balamore Road, Derisanamcope, Azhagiapandiapuram Post, Kanyakumari Dist – 629851, Tamilnadu, India

Phone: 04652 – 282239 / 282449 / 9751691516

Email: mahadaevan101@gmail.com

Website: www.saradaayurveda.in

Follow Us on Social Media

Stay connected and receive regular updates, health tips, and more by following us on social media.

At Sri Sarada Ayurvedic Hospital, we open the doors to ancient healing practices and guide you towards a healthier, more balanced life.

www.facebook.com/mahadevan.lakshmanasarma

www.facebook.com/vaidyanadham2014