SRI SARADA AYURVEDIC HOSPITAL


Healthy Recipes

சூப்

அகத்திக்கீரை சூப்

தேவையான பொருட்கள்

  • அகத்திக்கீரை - 1 கப்
  • துவரம் பருப்பு - 2 ஸ்பூன்
  • பச்சரிசி - 2 ஸ்பூன்
  • சீரகம் - ¼ ஸ்பூன்
  • பூண்டு - 10 பல்
  • சின்ன வெங்காயம் - 15
  • தக்காளி நறுக்கியது - 2
  • கிராம்பு - 3
  • பட்டை - 1 சிறு துண்டு
  • மிளகுத்தூள் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

உப்பை தவிர எல்லா பொருட்களையும் குக்கரில் போட்டு 4 தம்ளர் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரும் வரை சமைக்கவும். பிரஷர் அடங்கியதும் ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். பின், மேலும் 2 தம்ளர் தண்ணீர் விட்டு வடிகட்டவும். பின் வடிகட்டிய தண்ணீரை உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். தயாரான சூபில் மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.


மணத்தக்காளிக் கீரை சூப்

தேவையான பொருட்கள்

  • மணத்தக்காளிக் கீரை - அரை கட்டு
  • அரிசி கழுவிய நீர் - ஒரு கப்
  • தேங்காய்த்துருவல் - அரை கப்
  • சின்ன வெங்காயம் - 10
  • சீரகம் - முக்கால் தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு
  • சர்க்கரை - ஒரு சிட்டிகை
  • மிளகு - சிறிது (தேவையானால்)

செய்முறை

மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும். மூன்று முறை நீரில் நன்றாக அலசி எடுத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.

பாத்திரத்தில் கீரையோடு அரிசி கழுவிய நீரை ஊற்றி சர்க்கரை, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் சீரகத்தைத் சேர்த்து வேக விடவும்.தேங்காய்த் துருவலோடு தேவையான நீர் விட்டு அரைத்து வடிகட்டி, தேங்காய்ப்பால் எடுக்கவும். கீரை முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து வேகவிடவும். முழுவதும் வெந்ததும் தேங்காய் பால் சேர்த்து லேசாக சூடானதும் எடுத்து விடவும். தேங்காய்ப்பால் சேர்த்து கொதிக்க விடக்கூடாது. பொடித்த மிளகு தூவி, சாதத்துடன் ரசம் போலவோ அல்லது சூப் போலவோ பரிமாறலாம்.

விரும்பினால் பொடித்த மிளகு தூவி, சாதத்துடன் ரசம் போலவோ அல்லது சூப் போலவோ பரிமாறலாம். மிளகு தூவாமலும் சாப்பிட சுவையாக இருக்கும்.


முருங்கைக்கீரை சூப்

தேவையான பொருட்கள்

  • சாம்பார் வெங்காயம் - 4 பொடியாக நறுக்கியது
  • தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
  • முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி

அரைப்பதற்கு

  • மிளகு - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • சோம்பு - ½ டீஸ்பூன்
  • தனியா - 3 டீஸ்பூன்
  • இஞ்சி - சிறிய துண்டு
  • பூண்டு - 4 பல்
  • காய்ந்த மிளகாய் - 2
  • தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரைத்த விழுதை பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும். பிறகு நறுக்கிய வெங்கயாம், தக்காளி, முருங்கை கீரையைப் போட்டு கொதிக்க வைக்கவும். கீரை வெந்ததும் இறக்கி பரிமாறவும்.


வல்லாரை சூப்

தேவையான பொருட்கள்

  • வெங்காயம் – 2 (பெரியது)
  • மிளகு – ஒரு டீஸ்பூன்
  • சீரகம் – ஒன்றரை டீஸ்பூன்
  • பூண்டுப்பல் – 10
  • பச்சைமிளகாய் - 2
  • தக்காளி – 3
  • வல்லாரைக் கீரை - ஒரு கட்டு (பொடியாக நறுக்கியது)
  • கொத்தமல்லி - சிறிது
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை

வெங்காயம், மிளகு, சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளியைப் பச்சையாக மிக்ஸியில் அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த விழுதில், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும். ஒரு கொதிவந்ததும், நறுக்கிய வல்லாரைக் கீரையைச் சேர்க்க வேண்டும். கீரை பாதி அளவுக்கு வெந்ததும், உப்பு சேர்த்து, கொத்தமல்லி தூவி இறக்க வேண்டும். கீரையை நீண்ட நேரம் வேகவைக்கக் கூடாது.


குழம்பு

முருங்கைக்கீரைக் குழம்பு

தேவையான பொருட்கள்

  • முழுத் துவரை - 1/2 கப்
  • ஆய்ந்த முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
  • சின்ன வெங்காயம் - 6
  • பூண்டுப் பற்கள் - 5
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • சோளமாவு - 2 டீஸ்பூன்
  • கருவடாம் - 1
  • மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்
  • உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை

துவரையை நாலு மணி நேரம் ஊறவிட்டு, கழுவியபின், குக்கரில் போட்டு நீர் விட்டு, மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வெயிட் போட்டு, 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கீரையை பச்சை வாசனை போக சற்று புரட்டி எடுத்து தனியாக வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி, புளிக் கரைசல் விட்டு, மிளகாய்த் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். வெந்த துவரையை லேசாக மசித்துச் சேர்க்கவும். கொதிக்கும் குழம்பில் கீரையைச் சேர்த்து வெந்ததும், சோளமாவை சிறிது நீர் சேர்த்துக் கரைத்து ஊற்றிக் கொதித்ததும் கருவடாமை காய்ந்த எண்ணெயில் ஒன்றிரண்டாக உடைத்துவிட்டுப் பொரித்து, குழம்பில் கொட்டி இறக்கவும்.


எள்ளுக் குழம்பு

தேவையான பொருட்கள்

  • வெள்ளை எள் - 2 டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 10
  • பூண்டுப் பற்கள் - 10
  • தக்காளி - 1
  • மல்லி, புதினா - தலா சிறிது.
  • மிளகாய்ப் பொடி - ½ டீஸ்பூன்
  • சீரகப்பொடி - ½ டீஸ்பூன்
  • மல்லிப்பொடி - 1 டீஸ்பூன்
  • மஞ்சள்பொடி - ¼ டீஸ்பூன்
  • புளி - சின்ன எலுமிச்சை அளவு
  • உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

எள்ளை வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளிக்கவும். தக்காளித் துண்டடுகள், வெங்காயம், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். புளிக் கரைசலில் பொடி வகைககளைச் சேர்த்துக் கரைத்து ஊற்றவும். உப்புப் போட்டு சில நிமிடங்கள் கொதித்து. நல்ல மணத்தோடு (குழம்பு கெட்டியாக இருக்க வேண்டாம்) எண்ணெய் பிரியும் போது எள்ளுப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.


வெந்தயக் குழம்பு

தேவையான பொருட்கள்

  • வெந்தயம் - 1 தேக்கரண்டி
  • சின்ன வெங்கயாம் - 10 வட்டமாக நறுக்கவும்
  • புளி - 1 எலுமிச்சை அளவு
  • சாம்பார் தூள் - 1 ½ தேக்கரண்டி
  • தேங்காய்ப்பால் - 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • உப்பு - தேவைக்கேற்ப
  • நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை

எண்ணெயில் கடுகு, வெந்தயம், தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பறிகு புளி கரைசல், உப்பு, சாம்பார் பொடி பொடவும் 15 நிமிடம் வரை கொதிக்க விடவும். தேங்காய்ப்பாலில் 1 தேக்கரண்டி அரிசி மாவு கலந்து புளியில் விடவும். சிறு தீயில் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாக ஆனதும் அடுப்பிலிருந்து இறக்கவும். தேவையானால் சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.


மாம்பழ மோர்க் குழம்பு

தேவையான பொருட்கள்

  • மாம்பழம் - 2 அல்லது 3 சிறியது
  • தயிர் - 1 கப்
  • மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

மசாலா அரைக்க

  • தேங்காய் - 3 மேசைக் கரண்டி
  • பச்சை மிளகாய் - 2 அல்லது 3
  • உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

மாம்பழத்தைத் தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மாம்பழத்தை வேக வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், மாம்பழம், தயிர் சேர்த்து எல்லாவற்றையும் ஒன்றாக அரைக்கவும். உப்பு போடவும். இந்த மோர்க் குழம்பைச் சமைக்க வேண்டாம்.


ஆவாரம்பூ சாம்பார்

தேவையான பொருட்கள்

  • துவரம்பருப்பு - அரை கப்
  • சின்ன வெங்கயாம் - 12
  • முருங்கைக்காய், தக்காளி - தலா 2
  • சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
  • புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • கடுகு, உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
  • எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவைக்கேற்ப

வறுத்துப் பொடிக்க

  • வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
  • ஆவாரம் பூ - கால் கப் (காய்ந்தது)
  • உளுந்து - தலா ஒரு டீஸ்பூன்
  • புழுங்கல் அரிசி - தலா ஒரு டீஸ்பூன்
  • சீரகம் - அரை டீஸ்பூன்

செய்முறை

துவரம்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும். சின்ன வெங்காயத்தைத் தோலுரிக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்துக் கரைக்கவும். முருங்கைக்காயை விரல் நீள துண்டுகளாக நறுக்கவும். வெறும் வாணலியில் வெந்தயம், உளுந்து, அரிசி, சீரகத்தைச் சற்று சிவக்க வறுக்கவும். இறக்கி வைக்கும் போது ஆவாரம் பூ சேர்த்து ஒரு நிமிடம் கிளறி இறக்கவும். ஆறியதும் பொடிக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து சின்ன வெங்காயம் சேர்க்கவும். நன்கு வதக்கி முருங்கை, தக்காளி, உப்பு சேர்க்கவும். தக்காளி கரைந்ததும் சாம்பார் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, புளித் தண்ணீர் சேர்க்கவும். பச்சை வாசனை போக கொதித்த பின், முருங்கைக்காய் வெந்ததும் பருப்பைக் கரைத்துச் சேர்க்கவும். இது ஒரு நிமிடம் கொதித்ததும் வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி, கட்டிதட்டாமல் கிளறி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


கதம்ப சாம்பார்

தேவையான பொருட்கள்

  • குடமிளகாய் - ஒன்று
  • சிவப்பு பரங்கிக் கீற்று - 1
  • அவரைக்காய் - 4
  • கத்தரிக்காய் - 2
  • உருளைக்கிழங்கு - 1
  • பச்சை மிளகாய் - 1
  • முருங்கைக்காய் - 1
  • சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்
  • துவரம்பருப்பு,கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 1
  • புளி - ஒரு எலுமிச்சைபழ அளவு
  • தேங்காய் துருவல் - ஒரு கப்
  • கடுகு, வெந்தயம் - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - கைப்பிடி
  • பெருங்காயத்தூள் - சிறிதளவு
  • எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப

செய்முறை

எல்லா காய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். துவரம் பருப்பை குழைவாக வேக வைக்கவும். தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்களை வதக்கி, புளிக் கரைசலை விட்டு சாம்பார் பொடி, உப்பு போட்டு கொதிக்கவிடவும். வேகவைத்த துவரம்பருப்புடன் அரைத்து வைத்திருக்கும் விழுதைக் கலந்து, கொதிக்கும் குழம்புடன் சேர்க்கவும். இதில் கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.


வெந்தயக்கீரை சாம்பார்

தேவையான பொருட்கள்

  • வெந்தயக்கீரை - மூன்று கட்டு
  • புளி - எலுமிச்சைபழ அளவு
  • சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
  • துவரம்பருப்பு - ஒரு கப்
  • கடுகு, வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை

வெந்தயக் கீரையை ஆய்ந்து, நன்கு அலசி, எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும். புளியை 250மில்லி தண்ணீர் விட்டு கரைத்து , உப்பு, சாம்பார் பொடி, வதக்கிய வெந்தயக்கீரை சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன் வேகவைத்த பருப்பு சேர்த்து கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.


மாவிளக்கு

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • துருவிய வெல்லம் – ½ கப்
  • நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

அரிசியை அலசி நீரில் 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நீரை வடித்து மிக்ஸியில் அரிசியை மாவாக அரைத்து சலித்துக் கொள்ளவும். வாய் அகன்ற பாத்திரத்தில் மாவைப் போட்டு. அதனுடன் துருவிய வெல்லம். நெய் சேர்த்து பிசிறி கலந்து பெரிய உருண்டையாக பிடிக்கவும். நடுவில் சிறிது குழி பள்ளம் செய்து நெய் / பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றி வழிபடவும்.


கல்கண்டு சாதம்

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி, பொடித்த கல்கண்டு- தலா ஒருஉழக்கு
  • நெய் - 50 மில்லி
  • முந்திரி - 10
  • உலர்ந்த திராட்சை - 6
  • ஏலக்காய் - 5

செய்முறை

அரிசியை களைந்து, நன்றாக வேகவைக்கவும். பின்னர் கல்கண்டு, ஏலக்காய், சேர்க்கவும். உலர்ந்த திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும். அரிசி நன்றாகக் குழைவாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, மீதமுள்ள நெய்யைச் சேர்த்து கிளறி பரிமாறவும். அரிசி வேகும் போது வேண்டுமானால் சிறிதளவு பால் சேர்க்கலாம்.


Our Vision

Our vision is to rejuvenate and revitalize lives through the profound wisdom of Ayurveda. We aspire to be a beacon of health and happiness, empowering individuals to embrace their well-being and lead a balanced life.

Testimonials

Discover the success stories of our satisfied patients. Read testimonials from individuals who have experienced remarkable improvements in their health and quality of life through our Ayurvedic treatments.

Contact Us

Are you ready to embark on a transformative journey towards health and well-being? Get in touch with our team today to schedule a consultation or to learn more about our services.

Location: Balamore Road, Derisanamcope, Azhagiapandiapuram Post, Kanyakumari Dist – 629851, Tamilnadu, India

Phone: 04652 – 282239 / 282449 / 9751691516

Email: mahadaevan101@gmail.com

Website: www.saradaayurveda.in

Follow Us on Social Media

Stay connected and receive regular updates, health tips, and more by following us on social media.

At Sri Sarada Ayurvedic Hospital, we open the doors to ancient healing practices and guide you towards a healthier, more balanced life.

www.facebook.com/mahadevan.lakshmanasarma

www.facebook.com/vaidyanadham2014