SRI SARADA AYURVEDIC HOSPITAL


Healthy Recipes

துவையல்

துவரம் பருப்பு துவையல்

தேவையான பொருட்கள்

  • துவரம் பருப்பு - 1/2 கப்
  • தேங்காய்ப்பூ - 1 டேபிள் ஸ்பூன்
  • பச்சைமிளகாய் - 3
  • உரித்த பூண்டுப் பற்கள் - 4
  • உப்பு, எண்ணெய் - தேவைக்கு

செய்முறை

துவரம் பருப்புடன் சிறிது எண்ணெய் சேர்த்து குறைந்த தணிலில் பொன்னிறமாக, பொலபொலப்பாக வறுத்து சற்று ஆறியதும் மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைத்தெடுத்து, சல்லடையில் சலித்து, நைஸான பவுடரையும், குருணையையும் தனித்தனியாக வைக்கவும்.

மிக்ஸி ஜாரில் பருப்புக் குருணை, தேங்காய்ப்பூ, பச்சை மிளகாய், பூண்டுப் பற்கள், உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றவும், பின் நீர் விட்டு நைஸாக சற்றுத் தளர்ச்சியாக அரைத்தபின் பருப்புப் பவுடர் சேர்த்து சுற்றி எடுக்கவும். துவையல் மிகுந்த பக்குவமாக, சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் சேர்த்துச் சாப்பிடலாம்.


முடக்கத்தான் கீரை துவையல்

தேவையான பொருட்கள்

  • முடக்கத்தான்கீரை - ஒன்றரை கப்
  • உளுந்து - கால் கப்
  • கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
  • எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 2
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
  • உப்பு - தேவைக்கேற்ப

தாளிக்க

  • எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
  • கடுகு - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை

கடாயில் எண்ணெயைக் காயவைத்து பெருங்காயத்தூள், உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்து வறுக்கவும். வறுத்தவுடன் சுத்தம் செய்த கீரை, கொத்தமல்லித்தழை சேர்த்து நீர் வற்றும் வரையில் வதக்கவும். பின்னர் புளி, உப்பு சேர்த்துப் புரட்டி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இதை மிக்ஸியில் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்தெடுக்கவும். தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்க்கவும்.


பிரண்டை துவையல்

தேவையான பொருட்கள்

  • பிரண்டை (நறுக்கியது) - ஒரு கப்
  • உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 6 - 8
  • தேங்காய்த்துருவல் - கால் கப்
  • பூண்டு - 8 பல்
  • புளி - பெரிய நெல்லிக்காயளவு
  • கறிவேப்பிலை - கைப்பிடியளவு
  • இஞ்சி - ஒரு துண்டு
  • பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்
  • எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

பிரண்டையை நார் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயைக் காயவைத்து உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்துச் சிவந்ததும் எண்ணெயை இறுத்து எடுக்கவும். மீண்டும் எண்ணெயைக் காயவைத்து பிரண்டையைச் சேர்த்து நன்கு பொரிந்து வரும் வரை வதக்கி, பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் காய்ந்த மிளகாய், உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, புளி சேர்த்துக் கிளறவும். எல்லாவற்றையும் வறுத்ததும் தேங்காய்த்துருவல் சேர்த்து ஒருமுறை வதக்கி ஆறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும்.


கொள்ளு துவையல்

தேவையான பொருட்கள்

  • கொள்ளு - ½ கப்
  • மிளகாய் வற்றல் - 4 எண்ணம் (பெரியது)
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • மல்லித்தழை - 3 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
  • கறிவேப்பிலை - 3 கீற்று

செய்முறை

கொள்ளை, மிளகாய் வற்றலோடு சேர்த்து, சிறிது எண்ணெய் விட்டு, பொலபொலப்பாக சிவக்க வறுக்கவும். ஆறியதும் மிக்ஸியில் நைஸாகப் பொடித்து, புளி கரைத்த நீர், உப்பு சேர்த்து அரைக்கவும். பின், மல்லித் தழையும் சேர்த்து அரைக்க சுவையான கொள்ளுத் துவையல் ரெடி.


இஞ்சி துவையல்

தேவையான பொருட்கள்

  • இஞ்சி - 25 கிராம்
  • உளுந்தம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 3 அல்லது 4
  • பெருங்காயம் - சிறு துண்டு
  • புளி - 1 நெல்லிக்காய் அளவு
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - ¼ தேக்கரண்டி

செய்முறை

இஞ்சித் துண்டின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். எண்ணெயில் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், இஞ்சி, பெருங்கயாம் வறுத்துக் கொள்ளவும். வறுத்த பொருட்களை புளி, உப்பு சேர்த்து அரைக்கவும் கடுகு தாளிக்கவும். 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை எண்ணெயில் வறுத்து சேர்த்துத் துவையலில் சேர்த்து அரைக்கலாம்.


இஞ்சி, பிரண்டைத் துவையல்

தேவையான பொருட்கள்

  • பிரண்டைத் துண்டுகள் - ஒரு கைப்பிடி அளவு
  • இஞ்சி - ஒரு சிறிய துண்டு
  • புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
  • உளுந்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
  • நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

தளிரான கொழுந்துப் பிரண்டையைப் பொடியாக நறுக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனியாக நல்லெண்ணெய் விட்டு வறுக்கவும். வறுத்த மிளகாய், உளுந்தம்பருப்பை உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். சிறிது அரைபட்டவுடன் புளி, வதக்கிய கறிவேப்பிலை, இஞ்சி, பிரண்டையை சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

மருத்துவப்பயன்கள்

பிரண்டை, இஞ்சி ஜீரண சக்தியைத் தரும். பசியைத் தூண்டும், வாயுத்தொல்லை நீங்கும்.


கருவேப்பிலை துவையல்

தேவையான பொருட்கள்

  • கருவேப்பிலை - 1 கைப்பிடி அளவு
  • சாம்பார் வெங்காயம் - 15
  • காய்ந்த மிளகாய் - 6
  • புளி - 1 கோலிக் குண்டு அளவு
  • கடுகு, உளுந்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  • பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி
  • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  • தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுந்தம் பருப்பைப் போட்டு பொரிந்தவுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், புளியைப் போட்டு வதங்கியவுடன், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், கருவேப்பிலை, தேங்காயைச் சேர்த்து வதக்கவும். உப்பைச் சேர்க்கவும். மிக்சியில் போட்டு அரைத்துக்கொள்ளவும்.


பச்சடி

வேப்பம்பூ பச்சடி

தேவையான பொருட்கள்

  • வேப்பம் பூ - 1 மேசைக்கரண்டி
  • புளித்தண்ணீர் - ½ கப்
  • மிளகாய்த்தூள் - 2 சிட்டிகை
  • வெல்லம் பொடித்தது - 2 மேசைக்கரண்டி
  • மாங்காய் - தோல்சீவி பொடியாக நறுக்கவும்
  • உப்பு - 1 சிட்டிகை

செய்முறை

மேலே கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.


களி

திருவாதிரை களி

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி - 2 கப்
  • பயத்தம் பருப்பு - 1 பிடி
  • வெல்லம் - 350 கிராம்
  • தேங்காய்த் துருவல் - 4 டேபிள் ஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு - சிறிதளவு
  • ஏலக்காய் பொடி - சிறிதளவு
  • நெய் - ½ கப்

செய்முறை

அரிசியையும், பருப்பையும் சிவக்க வறுத்துக் கொள்ளவும். தனித் தனியாக வறுக்கவும். வறுத்த அரிசியைக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். பருப்பையும் அரைத்துக் கொள்ளவும். அரைத்த நொய் 1 பங்கு என்றால் 2½ பங்கு தண்ணீரை வாணலியில் கொதிக்க விடவும். தண்ணீரில் வெல்லத்தைப் பொடி செய்து போடவும். தேங்காய்த் துருவலையும் சேர்க்கவும். பாகு தளதள வென்று கொதித்து வரும் பொழுது 2 தேக்கரண்டி நெய் விட்டு அதில் அரைத்த நொய்யையும் அரைத்த பருப்பையும் போடவும். நிதானமான தீயில் சமைக்கவும். தண்ணீர் வற்றிய உடன் ஒரு கிண்ணத்தில் மாற்றி பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக விடவும். தயாரான களியின் மேல் மீதி நெய்யில் முந்திரப் பருப்பை வறுத்து போடவும் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.


மோர்க்களி

தேவையான பொருட்கள்

  • அரிசி மாவு - ஒரு கப்
  • மோர் மிளகாய் - 3 துண்டுகளாக்கவும்
  • புளித்த மோர் - ஒரு கப்
  • கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசி மாவுடன் மோர், உப்பு, பெருங்காய்த்தூள், தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் மோர் மிளகாய் சேர்த்து வறுக்கவும். பிறகு மாவுக் கரைசலைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும் (ஈரமான விரல்களால் தொட்டுப்பார்க்கும் போது, ஒட்டாமல் இருந்தால் வெந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்) மேலே கொத்த மல்லித்தழை தூவி, சூடாகப் பரிமாறவும்.


ராகி மோர்க்களி

தேவையான பொருட்கள்

  • ராகி மாவு (கேழ்வரகு மாவு) - ஒரு கப்
  • புளித்த மோர் - ஒரு கப்
  • மோர் மிளகாய் -3 (துண்டுகளாக்கவும்)
  • பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
  • கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

ராகி மாவுடன் மோர், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கரைக்கவும். அடிகனமான கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். அதனுடன் மோர் மிளகாய் சேர்த்து வறுக்கவும். பிறகு மாவுக் கரைசலைச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறி வேகவிட்டு இறக்கவும் (ஈரமான விரல்களால் தொட்டுப்பார்க்கும் போது, ஒட்டாமல் இருந்தால், வெந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளலாம்). மேலே கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.


உளுத்தங்களி

தேவையான பொருட்கள்

  • உளுத்தம் பருப்பு - 1 கப்
  • பச்சரிசி - ¼ கப்
  • வெல்லம் - ¾ கப்
  • தேங்காய்த்துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
  • நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

உளுத்தம் பருப்பையும் அரிசியையும் தனித்தனியாக வாணலியில் சிறிது வறுக்கவும். மிக்ஸியிலோ, மிஷினிலோ மாவு அரைத்துக் கொள்ளவும். வெல்லதில் ½ கோப்பை தண்ணீரை சேர்த்து அடுப்பில் வைத்து கரைய விடவும். வெல்லத்தை வடிகட்டி இரண்டொரு நிமிடங்கள் கொதிக்க விடவும். நல்லெண்ணெய் சேர்க்கவும். பாகில் மாவு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும். உளுத்தங்களியைக் கெட்டி நெய் வைத்து சூடாகப் பரிமாறவும்.


காப்பரிசி

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி – 1 கப்
  • தேங்காய் பல்லாக நறுக்கியது – ¼ கப்
  • நாட்டு சர்க்கரை – ½ கப்
  • ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
  • பாசிப்பருப்பு – ¼ கப்

செய்முறை

அரிசி பருப்பை அலசி நீரில் ஊற வைத்து ஒட்ட வடித்துக் கொள்ளவும்.. அதனுடன் நாட்டு சர்க்கரை, தேங்காய், ஏலக்காய் பொடி சேர்த்து பிரட்டி எடுத்து படைக்கலாம். பிரதோஷ காலத்தில் நந்திதேவர் / சிவனுக்கு கூட இந்த நைவேத்தியம் செய்வர்.


தேங்காய்ப்பால் கஞ்சி

தேவையான பொருட்கள்

  • பச்சரிசி நொய் - ஒரு உலக்கு
  • பூண்டு - 6
  • வெந்தயம் - ஒரு ஸ்பூன்
  • தேங்காய் - 1 (பால் எடுக்கவும்)
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி நொய்யை நன்றாகக் கழுவி, உப்பு, பூண்டு, வெந்தயம் சேர்த்து குழைய வேகவைத்து இறக்கவும். ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்த்து, டம்ளரில் குடிக்கும் பக்குவத்தில் பரிமாறவும். கறிவேப்பலை துவையலை இந்த கஞ்சிக்கு தொட்டுக் கொள்ளலாம்.


Our Vision

Our vision is to rejuvenate and revitalize lives through the profound wisdom of Ayurveda. We aspire to be a beacon of health and happiness, empowering individuals to embrace their well-being and lead a balanced life.

Testimonials

Discover the success stories of our satisfied patients. Read testimonials from individuals who have experienced remarkable improvements in their health and quality of life through our Ayurvedic treatments.

Contact Us

Are you ready to embark on a transformative journey towards health and well-being? Get in touch with our team today to schedule a consultation or to learn more about our services.

Location: Balamore Road, Derisanamcope, Azhagiapandiapuram Post, Kanyakumari Dist – 629851, Tamilnadu, India

Phone: 04652 – 282239 / 282449 / 9751691516

Email: mahadaevan101@gmail.com

Website: www.saradaayurveda.in

Follow Us on Social Media

Stay connected and receive regular updates, health tips, and more by following us on social media.

At Sri Sarada Ayurvedic Hospital, we open the doors to ancient healing practices and guide you towards a healthier, more balanced life.

www.facebook.com/mahadevan.lakshmanasarma

www.facebook.com/vaidyanadham2014