SRI SARADA AYURVEDIC HOSPITAL


Healthy Recipes

ரசம்

ஐந்து இலை ரசம்

தேவையான பொருட்கள்

  • வாத நாராயண இலை - ஒரு கைப்பிடி
  • முசுமுசுக்கை இலை - ஒரு கைப்பிடி
  • விருவாட்சி இலை - ஒரு கைப்பிடி
  • தூதுவளை, துத்தி இலை - ஒரு கைப்பிடி
  • மிளகு, சீரகம், தனியா - தலா ஒரு தேக்கரண்டி
  • சுக்கு - ஒரு சிறிய துண்டு
  • பூண்டு - 4 பற்கள்
  • மிளகாய் வற்றல் - 1
  • தாளிக்க தேங்காய் எண்ணெய், கடுகு - ஒரு தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - 6 உரித்தது

செய்முறை

முதலில் இலைகளைத் தவிர மற்ற பொருள்களை சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு மணம் வரும் வரை வறுத்து எடுத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும். இலைகளை நன்றாகச் சுத்தம் செய்து கழுவி, மஞ்சள் தூள் சேர்த்து முதலில் அரைத்த கலவையுடன் சேர்த்து நன்றாக மறுபடியும் ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். உரித்த சின்ன வெங்காயத்தை நன்றாகத் தட்டி எடுத்துக் கொண்டு, வாணலியில் தேங்காய் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை, சின்ன வெங்கயாத்தையும் தாளித்து, அரைத்த கலவையுடன் உப்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி தேவையான அளவு ஆற வைத்து அருந்தலாம்.


கொட்டு ரசம்

தேவையான பொருட்கள்

  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • தக்காளி - 4 பொடியாக நறுக்கியது
  • சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
  • தனியா பொடி - ½ டீஸ்பூன்
  • சீரக பொடி - ½ டீஸ்பூன்
  • வெல்லம் - சிறிதளவு
  • நெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - நெய்யில் தாளிக்க
  • கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை

புளியை 2½ கப் தண்ணீரில் கரைத்து சக்கையை எடுத்து விடவும். உப்பு, சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விடவும். தக்காளி, சாம்பார் பொடி தனியா பொடி சீரக பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். சிறிது வெல்லம் சேர்க்கவும். அடுப்பிலிருந்து இறக்கி தாளித்து, கொத்தமல்லி தூவவும். குளிர் காலத்தில் சுடச்சுட சூப் அல்லது சாதத்தில் கலந்து சாப்பிடலாம்.


திப்பிலி ரசம்

தேவையான பொருட்கள்

  • திப்பிலி - ஒரு டீஸ்பூன்
  • மிளகு - அரை டீஸ்பூன்
  • சீரகம் - ஒரு டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - ஓர் ஆர்க்கு
  • வேகவைத்த பாசிப்பருப்பு நீர் - கால் கப்
  • புளி - சிறிய எலுமிச்சை அளவு
  • தக்காளி - 2
  • வெல்லம் - ஒரு சிறிய துண்டு
  • தண்ணீர் - 400 மில்லி
  • கொத்தமல்லித்தழை - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

தாளிக்க

  • நெய் - ஒரு டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் - 2
  • கடுகு, உளுந்து, வெந்தயம், சீரகம் - தலா கால் டீஸ்பூன்

செய்முறை

திப்பிலி, மிளகு, சீரகம், கறிவேப்பிலையை வெறும் வாணலியில் வறுத்துப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து வடிகட்டி, அதனுடன் தக்காளி சேர்த்துக் கரைத்து உப்பு, மஞ்சள்தூள் கலந்து சூடாக்கி, ஒரு கொதிவிடவும். பிறகு வறுத்துப் பொடித்த பொடியைத் தூவி இன்னொரு தடவை கொதிவிடவும். இதனுடன் பாசிப்பருப்பு நீரைவிட்டு நுரைத்து வந்ததும் இறக்கவும். அதில் வெல்லம் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்க்கவும். பிறகு தாளிக்க கொடுத்துள்ள பொருள்களைக் கொண்டு தாளிக்கவும். வீடே மணக்கும் திப்பிலி ரசம்.


கண்ட திப்பிலி ரசம்

தேவையான பொருட்கள்

  • கண்டதிப்பிலி - 2 டேபிள் ஸ்பூன்
  • மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் வற்றல் - 2 காரம் தேவைக்கேற்ப
  • துவரம் பருப்பு - 10 டேபிள் ஸ்பூன்

மேற் கூறிய பொருட்களை நல்லெண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்.

  • புளி - சின்ன எலுமிச்சை அளவு
  • வெல்லம் - சிறு துண்டு
  • உப்பு - தேவைக் கேற்ப

செய்முறை

புளியை 2 கோப்பை தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். உப்பு, மஞ்சள் பொடி வெல்லம் சேர்த்து 10 அல்லது 15 நிமிடம் வரை கொதிக்க விடவும். பொடித்த மசாலாவை ½ கப் தண்ணீரில் கரைத்து புளிக் கரைசலில் விடவும். ரசம் நுரைத்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.


வேப்பம் பூ ரசம்

தேவையான பொருட்கள்

  • புளி - 1 எலுமிச்சை அளவு
  • மஞ்சள் பொடி - ¼ தேக்கரண்டி
  • மிளகாய் வற்றல் - 4
  • தெளிந்த வெந்த பருப்பு தண்ணீர் - தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு

தாளிக்க

  • நெய் - 2 தேக்கரண்டி
  • வேப்பம் பூ - ½ டேபிள் ஸ்பூன்
  • கடுகு, சீரகம், பெருங்காயம்

செய்முறை

1½ கப் தண்ணீரில் புளியைக் கரைத்து மஞ்சள் பொடி, உப்பு சேர்க்கவும். மிளகாய் வற்றலைச் சிறு துண்டுகளாக்கி புளிக்கரைசலில் போடவும். புளிக்கரைசலில் மிளகாய் துண்டுகளைச் சேர்த்து 10 அல்லது 15 நிமிடம் வரை கொதிக்கவிடவும். தெளிந்த பருப்பு தண்ணீரை 1½ கப் விடவும். ரசம் நுரைத்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். நெய்யில் கடுகு, சீரகம், தாளித்து பிறகு வேப்பம் பூவைப் போட்டு 1 நிமிடம் வரை வதக்கி ரசத்தில் போடவும். கறிவேப்பிலையும் தாளிக்கலாம்.


மோர் ரசம்

தேவையான பொருட்கள்

  • தண்ணீராக மோர் - 2 கப்

மசாலா

  • துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
  • மிளகாய் - 2
  • மிளகு - 10
  • தனியா - 1 டேபிள் ஸ்பூன்
  • மசாலாவை எண்ணெயில் வறுத்து பொடி செய்து கொள்ளவும்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • கெட்டியான மோர் - 2 கப்
  • நெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை - தாளிக்க

செய்முறை

தண்ணீரான மோரில் உப்பு, மசாலா போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். கெட்டியான மோரை விடவும். நுரைத்ததும் கடுகு பெருங்காயம் கறிவேப்பிலை நெய்யில் தாளிக்கவும்.


சாதம்

மிளகுச்சாதம்

தேவையான பொருட்கள்

  • உதிரியான சாதம் - ஒரு கிண்ணம்
  • மிளகுப்பொடி - ஒரு தேக்கரண்டி
  • நெய் - மூன்று தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு
  • கறிவேப்பிலை - 1 ஈர்க்கு
  • உப்பு, கடுகு - தேவைக்கேற்ப

செய்முறை

மிளகை நன்றாக நெய்யில் வறுத்துப் பொடி செய்துகொள்ளவும். வாணொலியில் எண்ணெய் அல்லது நெய் விட்டு சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு தாளிக்கவும் பின் சாதம், மிளகுப்பொடி போட்டு தேவைக்கேற்ப உப்பை போட்டு கிளறவும்.


கன்னியாகுமரி கறுப்பு உளுந்து சாதம்

தேவையான பொருட்கள்

  • அரிசி - ஒரு கப்
  • கறுப்பு உளுந்து - அரை கப்
  • தேங்காய் துருவல் - அரை கப்
  • பூண்டு - 4 பல்
  • சீரகம் - 2 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் - 4
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசி, உளுந்தை களைந்து தட்டிய பூண்டு, சீரகம் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும். இதனுடன் உப்பு, தேங்காய் துருவல், நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்துக் கிளறவும். இந்த சாதத்தை சூடாக தேங்காய் அல்லது எள் துவையலுடன் பரிமாறவும்.


கூட்டுக்கறி

தேவையான பொருட்கள்

  • கறுப்பு கொண்டைக்கடலை - அரை கப்
  • வாழைக்காய் - 1
  • சேனைக்கிழங்கு - 250கி
  • மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி
  • மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
  • மிளகுத்தூள் - ½ மேசைக்கரண்டி
  • துருவிய தேங்காய் - அரை மூடி
  • உப்பு, கடுகு கறிவேப்பிலை - சிறிதளவு
  • காய்ந்த மிளகாய் - 3
  • தேங்காய் எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

செய்முறை

கொண்டைக்கடலையை இரவே ஊறவைத்து, காலையில் குக்கரில் வேக வைத்து தனியே வைக்கவும். சேனைக்கிழங்கை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மிளகுத் தூள், சேர்த்து வேக வைக்கவும். இதனுடன் வேக வைத்துள்ள கடலைலைச் சேர்க்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் எல்லாவற்றையும் நன்கு பிரவுன் நிறம் வரும்வரை வறுக்கவும். இதில் சிறிதளவு தேங்காய்த் துருவலை தனியே அரைத்துக் கொள்ளவும். பிறகு வேகவைத்துள்ள காய்கறிகளுடன் அரைத்த தேங்காய் விழுது மற்றும் வறுத்த தேங்காய் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.


கேரளா கஞ்சி மற்றும் பயறுக் கறி

தேவையான பொருட்கள்

  • கேரளா சிவப்பு அரிசி - 3 கப்
  • தண்ணீர் - 6 கப்
  • உப்பு - தேவைக்கு

செய்முறை

அரிசியை நன்கு கழுவி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து குக்கரில் பதினைந்து நிமிடம் வேகவிடவும். கேரளா கஞ்சி தயார்.


பயறுக் கறி

தேவையான பொருட்கள்

  • பச்சை பயறு - 250 கிராம்
  • தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
  • கடுகு, கறிவேப்பிலை,உப்பு - தேவைக்கு ஏற்ப
  • மிளகாய்த்தூள் - 1 மேசைக்கரண்டி
  • மஞ்சள் தூள் - ¼ மேசைக்கரண்டி
  • துருவிய தேங்காய் - 3 மேசைக்கரண்டி
  • தண்ணீர் - 2 கப்

செய்முறை

பச்சைப் பயறை முதல் நான் இரவே ஊறவைக்கவும். இதனை குக்கரில் சேர்த்து அதனுடன் தேங்காய் எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, துருவிய தேங்காய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும். தண்ணீர் நன்கு சுண்டி, பயறு வெந்ததும், நன்கு கிளறவும். கேரளா கஞ்சியுடன் பரிமாறவும்.


நேந்திரப்பழ அல்வா

தேவையான பொருட்கள்

  • நேந்திரப்பழம் - 5
  • நெய் - 4 மேசைக்கரண்டி
  • சர்க்கரை - 50கிராம்
  • தேங்காய் எண்ணெய் - 250 கிராம்
  • ஏலக்காய் பொடி - ¼ மேசைக்கரண்டி

செய்முறை

நேந்திரப்பழத்தின் தோலை உரித்து சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அதில் நேந்திரப்பழத்தை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து அதில் சர்க்கரை, ஏலக்காய் பவுடர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து திக்கான பதம் வந்ததும் அதில் வறுத்து வைத்துள்ள நேந்திரப்பழத்தை சேர்த்து நன்கு கலக்கவும். பழத்தை பத்து நிமிடம் சர்க்கரைப் பாகில் ஊற வைத்து சாப்பிடால் சுவையாக இருக்கும்.


பானகம்

தேவையான பொருட்கள்

  • வெல்லம் பொடித்தது – 1 கப்
  • ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
  • சுக்கு பொடி – 1 சிட்டிகை
  • எலுமிச்சை பழம் - 1
  • நீர் - 1 ½ லிட்டர்

செய்முறை

நீரில் வெல்லத்தை நன்கு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் ஏலக்காய் பொடி, சுக்கு பொடி, எலுமிச்சை சாறு கலந்து நன்கு கலக்கி பருகவும்.


பாசிப்பருப்பு பாயசம்

தேவையான பொருட்கள்

  • பாசிப்பருப்பு - ஒரு உலக்கு
  • வெல்லம் - ஒரு உலக்கு
  • தேங்காய் பால் - 1 மூடி
  • முந்திரி - 10
  • உலர்ந்த திராட்சை - 6
  • ஏலக்காய் - 5

செய்முறை

பாசிபருப்பை வெறும் வாணலியில் வறுத்து, குழைய வேக வைக்கவும். இதனுடன் வெல்லத்தையும் ஏலக்காயையும் பொடித்துப் போடவும். ஆறியதும் தேங்காய்ப்பால் சேர்க்கவும். நெய்யில் முந்திரி, உலர்ந்த திராட்சையை வறுத்து சேர்க்கவும்.


Our Vision

Our vision is to rejuvenate and revitalize lives through the profound wisdom of Ayurveda. We aspire to be a beacon of health and happiness, empowering individuals to embrace their well-being and lead a balanced life.

Testimonials

Discover the success stories of our satisfied patients. Read testimonials from individuals who have experienced remarkable improvements in their health and quality of life through our Ayurvedic treatments.

Contact Us

Are you ready to embark on a transformative journey towards health and well-being? Get in touch with our team today to schedule a consultation or to learn more about our services.

Location: Balamore Road, Derisanamcope, Azhagiapandiapuram Post, Kanyakumari Dist – 629851, Tamilnadu, India

Phone: 04652 – 282239 / 282449 / 9751691516

Email: mahadaevan101@gmail.com

Website: www.saradaayurveda.in

Follow Us on Social Media

Stay connected and receive regular updates, health tips, and more by following us on social media.

At Sri Sarada Ayurvedic Hospital, we open the doors to ancient healing practices and guide you towards a healthier, more balanced life.

www.facebook.com/mahadevan.lakshmanasarma

www.facebook.com/vaidyanadham2014